வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை ஊழியர்கள் போராட்டம்

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை ஊழியர்கள் போராட்டம்

வருவாய் துறை ஊழியர்கள் போராட்டம் 

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வருவாய்த்துறை அலுவலர்களின், பணியிறக்கம், பெயர் மாற்றம் விதிதிருத்தம், அலுவலக உதவியாளர் காலியிடம் நிரப்புதல் உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் இன்று 22.02.24 முதல் தொடர் பணி புறக்கணிப்பு & அலுவலக வாயிலில் காத்திருப்புப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், இளநிலை வருவாய் ஆய்வாளர்கள், மற்றும் அலுவலக பதிவரை எழுத்தர் அலுவலக உதவியாளர்கள், உள்ளிட்டோர் தொடர் பணி புறக்கணிப்பு & அலுவலக வாயிலில் காத்திருப்புப்போராட்டடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களின் அனைத்து இருக்கைகளும் காலியாக உள்ளது. மேலும் பல்வேறு வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் பட்டா திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இந்த நிகழ்வில் வட்ட கிளை தலைவர் ஏழுமலை துணை தலைவர் சென்றாயன் மாவட்ட துணை செயலாளர் திருவேங்கடம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story