பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் காலவரைற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறிசோடி காணப்பட்டது
பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் வருவாய் துறை ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் வருவாய் துறை ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறுச்சோடி காணப்பட்டது. பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது வெளியூரில் இருந்து வந்த பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இப் போராட்டத்தில் வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைத்து நிலை பணியாளர்களும் கலந்து கொண்டனர்

Tags

Next Story