வருவாய்த் துறையினர் வேலை நிறுத்தம்

வருவாய்த் துறையினர் வேலை நிறுத்தம்

  ராமநாதபுரத்தில் வருவாய்த் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அலுவலக பணிகள் முடங்கியுள்ளன. 

ராமநாதபுரத்தில் வருவாய்த் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அலுவலக பணிகள் முடங்கியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர் செந்தில் விநாயகம் பணி நீக்கம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் சார்பாக இன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் அலுவலகத்தை புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்வதாக மாவட்டத் தலைவர் பழனி குமார் தெரிவித்துள்ளார். வருவாய்த் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய் துறை அலுவலகம் இயங்காததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் தேவையை உணர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story