வருவாய்த்துறையினர் போராட்டம் - வெறிச்சோடிய வட்டாச்சியர் அலுவலகம்

வருவாய்த்துறையினர் போராட்டம் - வெறிச்சோடிய வட்டாச்சியர் அலுவலகம்

வட்டாச்சியர் அலுவலகம்

வருவாய்த்துறையினரின் காலவரையற்ற போராட்டத்தால் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாச்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக தங்களின் கோரிக்கைகளான பணி பாதுகாப்பு மற்றும் காலி பணியிடங்களை உடனே நிரப்ப கோரி உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்,இந்த நிலையைக் செவி சாய்க்காத அரசை கண்டித்து வருவாய் துறை அலுவலர்களான தாசில்தார் துணை தாசில்தார் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு நிலையில் உள்ள அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் , சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் துறை அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் பணியை புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Tags

Next Story