வருவாய் அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

வருவாய் அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம் 

3 நாட்களுக்குள் தமிழக அரசு வருவாய் துறையினரின் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், வருவாய் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் வருவாய் துறையினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் துறையினர் மாவட்ட தலைவர் அருள்மொழிவர்மன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூன்று நாட்களாக இரவு பகல் என தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு வருவாய் துறையினர் தொடர் போராட்டத்தினையடுத்து 9 அம்ச கோரிக்கைகளில் 1கோரிக்கையை நிறைவேற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசனை வெளியிடப்பட்டது. ஆனால் வருவாய் துறையினரினர் 9 அம்ச கோரிக்கைகளையும் வருகிற மூன்று தினங்களுக்குள் தமிழக அரசு நிறைவேற்றா விட்டால் சென்னையில் உள்ள வருவாய் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என தெரிவித்தார்.

Tags

Next Story