சீர்காழியில் வருவாய் கிராம ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

சீர்காழியில் வருவாய் கிராம ஊழியர்கள்  காத்திருப்பு போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

சீர்காழியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர்கள் , கருணை அடிப்படையில் பணி வழங்கும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும், வருவாய் கிராம ஊழியர்களை, டி. பிரிவில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம், வட்டத் தலைவர் இளம்வழுதி, தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ,வருவாய் கிராம ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story