தேர்தல் பணி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

தேர்தல் பணி  அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

ஆய்வுக்கூட்டம் 

திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற பொது தேர்தல் -2024 நடைபெறுவதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான் ஷி நிகம், துணை ஆட்சியர் முகுந்தன், திண்டிவனம் நகராட்சி ஆணையர் திருமதி தமிழ்ச்செல்வி ,திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் சிவா, மரக்காணம் வருவாய் வட்டாட்சியர் பாலமுருகன் ,உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Tags

Next Story