புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டையில் திமுக அரசை கண்டித்து புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி,அம்பேத்கர் புரட்சி தேசம் கட்சி இணைந்து கள்ளச்சாரத்தை தடுக்க முடியாத தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பதவி விலக கோரியும், கள்ளச்சாராயத்திற்கு பலியானவர்களுக்கு நீதி கேட்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தோழர் ஆர் பிரேம் குமார, அம்பேத்கர் புரட்சி தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ ராஜ்குமார் தலைமையில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி கந்தர்வகோட்டை ஒன்றிய பொறுப்பாளர் தோழர் தங்க துரை, அம்பேத்கர் புரட்சி தேசம் கட்சியின் நகரச் செயலாளர் தோழர் சேகர் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் துவக்க உரையாக அம்பேத்கர் புரட்சி தேசம் கட்சியின் நிறுவனர் முள்ளூர் தியாகு அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் தினேஷ் குமார் கண்டன உரையாற்றினார். அம்பேத்கர் புரட்சி தேசம் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் கோவிந்தராஜன் கண்டன உரை நிகழ்த்தினார். புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் முருகேசன், முத்து சரவண ன், புதுகை ஒன்றிய பொறுப்பாளர் சேக் தாவூத், திருவரங்குளம் ஒன்றிய கிழக்குப் பொறுப்பாளர் தமிழரசன் புரட்சி௧ர சில்லறை வர்த்தக சங்கத்தின் பொறுப்பாளர் குபேந்திரன், இந்திய புரட்சிகர பெண்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி, மாவட்ட பொறுப்பாளர் ராதிகா, கும்மங்குளம் கிளை பொறுப்பாளர் தோழர் தன லட்சுமி, கட்டுமான சங்கத்தின் பொறுப்பாளர் தோழர் வெற்றிவேல் மற்றும் அம்பேத்கர் புரட்சி தேசம் கட்சியின் பொறுப்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

Tags

Next Story