மெட்ரோ சிங்கார சென்னை அட்டையில் பயணம் செய்தவர்களுக்கு பரிசு

சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி மெட்ரோ இரயிலில் அதிக முறை பயணம் செய்த பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்னை மெட்ரோ இரயில்களில் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 15.12.2023 முதல் 15.03.2024 வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசு பொருள் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் Namma Yatri உடன் இணைந்து பரிசு பொருள்களை வழங்குகிறது. சிங்கார சென்னை அட்டையை (NCMC) பயன்படுத்தி ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14, 2024 வரை மெட்ரோ இரயிலில் அதிக முறை பயணித்த 40 பயணிகளுக்கு பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் நடைபெற்றது. மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) பரிசுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, நந்தனத்தில் மெட்ரோஸ் வளாகத்தில் “பீட்ஸ் @ மெட்ரோஸ்” மெகா இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரபல சூப்பர் சிங்கர் நட்சத்திரங்களான ஸ்ரீநிஷா ஜெயசீலன், ஸ்ரீதர் சேனா மற்றும் Bachelor’s Band இசை குழுவின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் பெனுதர் பர்ஹி, மண்டல மேலாளர், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story