காஞ்சி அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்

காஞ்சி அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

காஞ்சிபுரம் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

காஞ்சிபுரம் ஒன்றியம், விஷார் ஊராட்சி, புது காலனியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க, சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் வாயிலாக மின்தட பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், கொண்டகட்டியம்மன் கோவில் தெருவில், இரு மின்கம்பங்களுக்கு இடையே உள்ள மின்கம்பிகள் தாழ்வாக உள்ளன.

இதனால், இச்சாலையில் இரு கனரக வாகனங்கள் செல்லும்போதோ அல்லதுவைக்கோல் ஏற்றி வரும்லாரி சாலையோரம் ஒதுங்கும்போது, தாழ்வாக செல்லும் மின்கம்பியில் உரசி மின்விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.

எனவே, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags

Next Story