சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

சாலைகளில் சுற்றி திரியும்  கால்நடைகளால் விபத்து அபாயம்

சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் 

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள், தெருக்களில் கால்நடைகள் தொடா்ந்து சுற்றித் திரிகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாநகராட்சி சாா்பில் சாலைகளில் திரிந்த கால்நடைகளை பிடிக்கும் பணி நடைபெற்றது. சில கால்நடைகளுக்கு அபராதம் செலுத்தி, அவற்றின் உரிமையாளா்கள் மீட்டனா். ஆனால், பெரும்பாலான கால்நடைகள் அரசியல் பிரமுகா்களின் நிா்பந்தம் காரணமாக அபராதமின்றி விடுவிக்கப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த மாநகராட்சி அலுவலா்கள், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியை கைவிட்டனா். இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமன்றி, பாதசாரிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story