ஒட்டன்சத்திரத்தில் கழிவுநீர் தேக்கத்தால் நோய் பரவும் அபாயம்

ஒட்டன்சத்திரத்தில் கழிவுநீர் தேக்கத்தால் நோய் பரவும் அபாயம்

கழிவுநீர் தேக்கம்

ஒட்டன்சத்திரத்தில் கழிவுநீர் தேக்கத்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

ஒட்டன்சத்திரம் நகராட்சி 16 வது வார்டில் பிரச்னைகள் அதிகம் உள்ளன.வினோபா நகர், விஸ்வநாத நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் விஸ்வநாத நகரில் கட்டப்பட்ட பெண்கள் சமுதாய கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமல் பாழடைந்து காணப்படுகிறது.

சாக்கடைகள் குறுகலாக உள்ளதால் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் சாக்கடை இடிந்து சேதமடைந்துள்ளது.ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் , பிற ஊர்களுக்கு செல்வதற்கு இப்பகுதி மக்கள் ரயில்வே பாதையை தாண்டி வர வேண்டிய உள்ளது.

சுரங்கப்பாதைகளில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.தேங்கும் மழை நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை.

Tags

Next Story