சங்கராபுரத்தில் ஆற்றுத் திருவிழா ஆலோசனை கூட்டம்

சங்கராபுரத்தில் ஆற்றுத் திருவிழா ஆலோசனை கூட்டம்

ஆற்று திருவிழா 

சங்கராபுரத்தில் ஆற்றுத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆற்றுத் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் வாசவி மண்டபத்தில் நடந்தது. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜனார்தனன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தர்மகர்த்தா பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பழனி, சிவா, அரிமா மாவட்டத் தலைவர் ராஜா, சிகாமணி, வியாபாரிகள் சங்க தலைவர் சக்கரவர்த்தி, குசேலன் ஆகியோர் பேசினர். வரும் ஜனவரி 17 ம் தேதி ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடத்துவது, இரவு இன்னிசை கச்சேரி நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story