சாலை வளைவு எச்சரிக்கை பலகை; சீரமைக்க வலியுறுத்தல்

கோட்டைமேடு வழியாக விப்பேடு கிராமத்திற்கு செல்லும் சாலையில் வளைவு குறியீடு எச்சரிக்கை பலகையை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் கீழம்பி -செவிலிமேடு புறவழி சாலையில் இருந்து, கோட்டைமேடு கிராமம் வழியாக விப்பேடு கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வளைவுப்பகுதி, வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், வளைவு குறியீட்டுடன் எச்சரிக்கை பலகை அமைக்கப் பட்டுள்ளது. இவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலை வளைவு குறித்த எச்சரிக்கை பலகை சாய்ந்து கிடக்கிறது. இதனால், இச்சாலையில் வளைவு இருப்பதை அறியாமல் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் அங்குள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சாய்ந்து கிடக்கும், சாலை வளைவு குறியீடு எச்சரிக்கை பலகையை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்."

Tags

Next Story