பள்ளி கட்டிடம் கட்டி தர வலியுறுத்தி சாலை மறியல்

தோட்டக்குறிச்சியில் பள்ளி கட்டிடம் கட்டி தர வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் செய்தனர்.

தோட்டக்குறிச்சியில், பள்ளி கட்டிடம் கட்டி தர வலியுறுத்தி மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல். கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பகுதியில் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வந்த உயர்நிலைப்பள்ளி சிதலமடைந்திருந்ததால், 2021 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு செயல்பட்டு வந்த பள்ளி அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் 3 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

இதனால், மாணவர்களுக்கு சமுதாய கூடத்தில் போதிய வசதி இல்லை எனவும், மூன்று ஆண்டுகளாக பள்ளி கட்டிடம் கட்டாமல் காலதாமதப்படுத்துவதால் பொதுமக்கள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளை சமுதாய கூடத்தில் நடத்த முடியாமல் சிரமப்படுவதாக குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து தோட்டக்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் பள்ளி கட்டிடம் கட்டி தர ஏற்பாடு செய்யப்படும் என்ற உறுதி அளித்த பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பு நிலவியது.

Tags

Next Story