திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சாலை மறியல்

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சாலை மறியல்

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சாலை மறியல்

திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி உசிலம்பட்டியில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. தமிழ்நாடு அரசின் நியாயவிலைக்கடைகளில் வெளி மாநிலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணைய் விற்பதற்குப் பதிலாக தமிழக விவசாயிகளிடமிருந்து தேங்காய்-நிலக்கடலை-எள் உள்ளிட்ட எண்ணைய் வகைகளை இறக்குமதி செய்ய வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா.இதனை திமுக அரசு கடந்த 2021 சட்டமன்றத்தேர்தலின் போது 66வது தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது.ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.தற்போது தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் விவசாயிகளிடமிருந்து எண்ணைண் வகைகளை இறக்குமதி செய்யக் கோரியும் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.போலிசார் அவர்களை கைது செய்தனர்.

Tags

Next Story