டாஸ்மாக் கடையை இடம்மாற்ற வலியுறுத்தி சாலை மறியல்

ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி சாலை மறியல்; எம்.பி., வாகனத்தை வழிமறித்து புகார் மனு அளிக்கப்பட்டது.

ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரி சாலை மறியல் M P டாக்டர் செல்வகுமார் கார் வழிமறிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த, குன்னத்தூர் அருகே உள்ள சென்னானூர் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் செயல்படுகிறது.இந்த கடையினால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதனால் இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருப்பதால் மதுபான கடையை உடனடியாக வேறு இடத்திற்க்கு மாற்ற வேண்டும் என கூறி, அப்பகுதி பொது மக்கள் 30 -க்கும் மேற்பட்டோர், சென்னானூர் கிராமத்தில் பூமி பூஜைக்காக வந்த கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் காரை வழிமறித்து, குன்னத்தூர் -ஆதாலியூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பிறகு தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர். உடனடியாக மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதாக எம் பி எம் பி டாக்டர் செல்வகுமார் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story