குடிநீர் கேட்டு சாலை மறியல் !

குடிநீர் கேட்டு சாலை மறியல் !

கெங்கவல்லி

கெங்கவல்லி அருகே ஆழ்துளை குழாய் கிணறு பராமரிப்பின்றி குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. நேற்று காலை, 11:00 மணிக்கு அப்ப குதி மக்கள், ஆத்துார் - கெங்கவல்லி சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே நடுவலுார் ஊராட்சி பள்ளக்காட்டில், 500க்கும் மேற்பட்ட குடியிருப் புகள் உள்ளன. அங்குள்ள ஆழ்துளை குழாய் கிணறு பராமரிப்பின்றி குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. நேற்று காலை, 11:00 மணிக்கு அப்ப குதி மக்கள், ஆத்துார் - கெங்கவல்லி சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.பி.டி.ஓ., தாமரைச்செல்வி பேச்சு நடத்தி, குடிநீர் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் என, உறுதி அளித்தார். பின் மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த, 4ல் ஆழ்துளை குழாய் கிணற்றை சீரமைக்கக்கோரி, பள்ளக்காடு மக்கள், நடுவலுார் ஊராட்சி அலுவ லகத்தை பூட்டு போட்டிருந்தனர்.

Tags

Next Story