மூலனூரில் சாலை அமைக்கும் பணி - அமைச்சர்கள் துவக்கி வைப்பு

மூலனூரில் சாலை அமைக்கும் பணி - அமைச்சர்கள் துவக்கி வைப்பு

சாலை பணிகள் துவக்கம் 

மூலனூர் பேரூராட்சி ராகியவலசில் தார் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர் .
திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி ராக்கியாவலசில் செயலற்ற நிதி திட்டத்தின் கீழ் சோமன் கோட்டை முதல் கோட்டை மூலனூர் வரை போரை முதல் சின்னககாம் பட்டி ரோடு வரை பள்ளிப்பட்டி முதல் பேரூராட்சி எல்லை வரை மற்றும் ராக்கியாவாலசு முதல் தாளக்கரை ரோடு வரை தார் சாலை அமைக்கும் பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்கள்.உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன்,,மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி,மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story