ஸ்ரீபெரும்புதுாரில் குண்டும் குழியுமாக மாறிய சாலை

ஸ்ரீபெரும்புதுாரில் குண்டும் குழியுமாக மாறிய சாலை

சாலைகளில் தேங்கிய மழை நீர்

ஸ்ரீபெரும்புதுாரில், அரை மணி நேரம் பெய்த லேசான மழைக்கே, சாலைகளில் மழைநீர் தேங்கி, குண்டும் குழியுமானதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை அரை மணி நேரத்துக்கும் மேலாக கோடை மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. இருப்பினும், ஸ்ரீபெரும்புதுாரில் பெய்த மழையினால், பேரூராட்சியில் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. குளம் போல் தேங்கிய மழைநீரால், சாலைகள் குண்டும் குழியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனால், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மணிக்கூண்டு சந்திப்பில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்தது. எனவே, எதிர்வரும் பருவ மழைக்குள், சாலைகளை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story