அம்மாபேட்டை ஜல்லி கற்களாக மாறிய தார் சாலை

அம்மாபேட்டை ஜல்லி கற்களாக மாறிய தார் சாலை

சாலை பழுது

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டையில் உள்ள பழுதடைந்த சாலைகளை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் 39 மற்றும் 40-வது வார்டு பகுதிகளில் திரு.வி.க. சாலை உள்ளது. இந்த சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான கடைகள் உள்ளன. குடியிருப்புகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். சாலையின் ஒரு புறத்தில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது.

பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்தது. குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிற்கிறது. பழுதான சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் புகையிலை மண்டி ஆர்ச் முதல் பலப்பட்டறை மாரியம்மன் கோவில் வரை பல இடங்களில் சாலை ஜல்லி கற்களாக காட்சி அளிக்கின்றன. இதனால் தினமும் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Tags

Next Story