சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பைக் பேரணி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பைக் பேரணி


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பைக் பேரணி நடைபெற்றது.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பைக் பேரணி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பைக் பேரணி நடைபெற்றது. பயணியா் விடுதி முன்பிருந்து இப்பேரணியை மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன் தொடக்கிவைத்தாா். பிரதான சாலை, திருவேங்கடம் சாலை, கழுகுமலை சாலை உள்பட முக்கிய வீதிகள் வழியாக இப்பேரணி தேரடியில் நிறைவடைந்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினா் செய்திருந்தனா்.

Tags

Next Story