சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் போக்குவரத்து சாலை பாதுகாப்பு துறை, வட்டாரப் போக்குவரத்து துறை இணைந்து நடத்தும் பள்ளி வாகன மேலாளர்கள் ,ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமில் பள்ளி வாகனம் மேலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் என 350 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்றனர் . இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story