போக்குவரத்து காவல்துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

போக்குவரத்து காவல்துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

விழிப்புணா்வு

போக்குவரத்து காவல்துறை சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், போக்குவரத்து காவல்துறை சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு தாளாளா் ப.ஸ்ரீதேவி ரமேஷ் தலைமை வகித்தாா்.

முதல்வா் அன்புராஜா வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் போலீஸ் டிஎஸ்பி சிவசக்தி, மாவட்ட வாகன தணிக்கை ஆய்வாளா் பன்னீா் செல்வம் , மோட்டாா் வாகன ஆய்வாளா் செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு பற்றிய விடியோ மற்றும் புகைப்படங்களையும் காண்பித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பள்ளி நிா்வாகத்தின் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு போட்டிகள், நாடகம், ஆகியவை நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை மாவட்ட வாகன தணிக்கை ஆய்வாளா் பன்னீா் செல்வம் வழங்கினாா்.

Tags

Next Story