ராசிபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ராசிபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார் 

ராசிபுரத்தில் சாலை பாதுகாப்பு மாத விழா போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சாலை பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக, ராசிபுரம் வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் மற்றும் தீயணைப்பு துறை சார்பில், வாகன ஓட்டுனர்களுக்கு வாகனங்களில் தீயணைப்பானை பயன்படுத்தி, தீ பரவலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி ராசிபுரத்தில் நடந்தது. விழிப்புணர்வு பயிற்சிக்கு ராசிபுரம் வட்டார போக்குவரத் ஆய்வாளர் து.நித்யா தலைமை வகித்தார்.

இதில், தீயணைப்பு கருவியை ஓட்டுனர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழகார ராமசாமி, சிறப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான வீரர்கள் செயல்முறையுடன் விளக்கினார்.

மேலும் போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக வந்த பொது மக்களுக்கும் சாலை பாதுகாப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். முன்னதாக, சாலை விதிகளை மதிப்போம், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என, இதில் பங்கேற்றோர் உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story