சுரண்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுரண்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சுரண்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம், சுரண்டையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சுரண்டை ரத்னா சில்க்ஸ் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரத்னா சில்க்ஸ் ரத்தினசாமி வரவேற்றார் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story