திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

எஸ்பி சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நாட்டு நலப்பணித் திட்டத்தால் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர்‌ நாவுக்கரசன், கலந்து கொண்டு சாலையின் குறியீடுகள் மற்றும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்கும் முறையினையும் விபத்து ஏற்படும் சூழ்நிலையில் முதலுதவி செய்யும் வழிமுறைகளையும் மாணவிகளுக்கும் புரியும் விதமாக பல பயனுள்ள கருத்துக்களை வழங்கி விழா வினைச் சிறப்புச் செய்தார். பல்வேறு விதமான வினாக்களை மாணவிகளிடம் எழுப்பி சரியான விடை கூறியவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கி பாராட்டினார். புது வாழ்வு அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு இரத்ததானம் வழங்குவோர் சங்கத்தில் இருந்து பிளட்ஷாம் கலந்து கொண்டு விபத்தில் லா உலகு செய்வோம். விபத்தானவர்களுக்கு உதவிகள் செய்வோம் என்று மனிதநேயம் குறித்து பல கருத்துக்களை மாணவிகளுக்கு வழங்கி விழாவினைச் சிறப்பு செய்தார்.

Tags

Next Story