சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி 

கிருஷ்ணகிரியில் நடந்த சாலை பாதுகாப்பு மற்றும் சீட் பெல்ட் விழிப்புணர்வு பேரணியை கோட்டாட்சியர் பாபு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் சீட் பெல்ட் விழிப்புணர்வு பேரணி. கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் சீட் பெல்ட் விழிப்புணர்வு பேரணி வருவாய் கோட்டாட்சியர் பாபு, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தமிழரசி, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இப்பேரணியில் அறிஞர் அண்ணா கல்லூரி மாணவர்கள் மற்றும் பி எஸ் வி கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்று சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய பதாகைகள் ஏந்திய வண்ணம் கிருஷ்ணகிரி நகரின் முக்கிய வழியாக பேரணியாக சென்றனர். தொடர்ந்து சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இப்பேரணியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காளியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆனந்தன், அன்பு செழியன், ஓட்டுநர் பள்ளி பயிற்சி வாகனங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story