ஏற்காட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஏற்காட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பேரணியில் கலந்து கொண்டவர்கள் 

ஏற்காட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் பங்கேற்றார்.

ஏற்காடு கிரேட் டிரைல்ஸ் ஜி.ஆர்.டி. ஓட்டல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று மாலை நடந்தது. பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏ.கே.அருண் கபிலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

பேரணி ஜி.ஆர்.டி. ஓட்டலில் இருந்து தொடங்கி ஊராட்சி அலுவலகம், படகு இல்லம் வழியாக ஒண்டிக்கடை ரவுண்டானாவை அடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் காரில் சீட் பெல்ட் அணிய வேண்டும். மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும்.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர். மேலும் சாலையோரம் நின்றவர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர். பேரணியில் ஜி.ஆர்.டி. பொதுமேலாளர் செந்தில்குமார் மற்றும் ஜி.ஆர்.டி. ஊழியர்கள், போலீசார், பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story