சாலை பாதுகாப்பு மாத விழா - தீயணைப்பு துறை விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு மாத விழா - தீயணைப்பு துறை விழிப்புணர்வு

விழிப்புணர்வு 

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடக்கும் சாலை பாதுகாப்பு மாத விழாவில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மாத விழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று தீயணைப்பு துறை சார்பில், வாகனத்தில் செல்லும்போது தீவிபத்து ஏற்பட்டால் எப்படி செயல்படுவது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகர் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி செயல்முறை விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிஸ் மாசிலாமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story