சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பிரச்சாரம்

சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இன்று தெற்குவாசல் சந்திப்ப பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.

மதுரை தெற்கு வாசல் சந்திப்பு பகுதியில் இன்று நண்பகலில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மதுரை நகர் போக்குவரத்து காவல் துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ்ராம், தல்லாகுளம் தமிழ்நாடு டொனிக்கல் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிகள் சுமார் 17 பேருக்கு போக்குவரத்து விதிகளையும், தலை கவசத்தின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். தொடர்ந்து மாணவிகள் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர்க்கு விழிப்புணர்வு பற்றிய நோட்டீஸ் மற்றும் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டி எதிர் வரும் வாகன ஓட்டிகள் கண் கூசாமல் இருக்க செய்தனர்.

உடன் தெற்குவாசல் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஸ்வரன், முதல்நிலை காவலர் ஜெயகாந்தன் மற்றும் பலர் இருந்தனர் இதுபோன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நகரில் முக்கிய பகுதிகளில் அந்தந்த பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது

Tags

Next Story