சாலை விரிவாக்கப் பணி - அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

சாலை விரிவாக்கப் பணி -  அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

அமைச்சர் ஆய்வு 

தூத்துக்குடி 4ஆம் ரயில்வே கேட் அருகே சாலை விரிவாக்கப் பணியை அமைச்சர் கீதாஜீவன் இன்று பார்வையிட்டார். 
தூத்துக்குடி 4ஆம் இரயில்வே கேட் பகுதியில் போக்குரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி 16, 17 மற்றும் 18வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை அமைச்சர் பார்வையிட்டார். ஆய்வின்போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags

Next Story