ராசிபுரம் அருகே சாலை அகலப்படுத்தும் பணி: அமைச்சர் பூமிபூஜை

ராசிபுரம் அருகே  சாலை அகலப்படுத்தும் பணி:  அமைச்சர்  பூமிபூஜை

பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

இராசிபுரம் அருகே 3.30கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு அமைச்சர் மதிவேந்தன் பூமி பூஜை செய்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூர் ஒன்றியம் பகுதியில் உள்ள ஆர். புதுப்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டு சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

ஆர்.புதுப்பாளையம் மாதா கோயில் இருந்து ராசிபுரம் நகராட்சி எல்லை வரை ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 330 லட்சம் மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை விழாவில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா மதிவேந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் ஆர் எம் துரைசாமி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஏ ஆர் துரைசாமி உட்பட கழகத் தொண்டர்களும் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story