ராஜகோபாலப்பேரியில் சாலைப் பணி தொடக்கம்

ராஜகோபாலப்பேரியில் சாலைப் பணி தொடக்கம்
ராஜகோபாலப்பேரியில் சாலைப் பணி தொடக்கம்
தென்காசி மாவட்டம்,சுரண்டையில் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே ராஜகோபாலப்பேரியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 9.50 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் கிருஷ்ணஜெயந்தி முன்னிலை வகித்தாா். தென்காசி எம்,எல்,ஏ பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன் ஆகியோா் பூமி பூஜை செய்து, பணிகளைத் தொடக்கிவைத்தனா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினா் நான்சி ஹேமா, ஊராட்சி துணைத் தலைவா் ராஜ், ஊராட்சிச் செயலா் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Tags

Next Story