சாலை பணிகள் துவக்கம்

சாலை பணிகள் துவக்கம்

காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் சாலை பணிகளை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் சாலை பணிகளை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், மறவம்பாளையம் ஊராட்சி செம்மங்குடி பாளையத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ஆலம்பாடி ஊராட்சியில், பெருந்துறை - காங்கேயம் சாலை முதல் குப்பாகவுண்டன்வலசு வழியாக வரதப்பா கவுண்டன் புதூர் வரையிலும், மறவம்பாளையம் ஊராட்சியில் சாவடி கீரனூர் சாலை முதல் நொய்யல் ஆறு வழியாக ஒரத்துப்பாளையம் அணை வரை சாலை அமைக்கும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ .சாமிநாதன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story