சாலை மறியல் போராட்டம்

சாலை மறியல் போராட்டம்

 சாலை மறியல் போராட்டத்தால் ஆண்டிப்பட்டி -வருசநாடு, கண்டமனூர் - தேனி சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல் போராட்டத்தால் ஆண்டிப்பட்டி -வருசநாடு, கண்டமனூர் - தேனி சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் ஏழாவது வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த ஆறு மாதமாக தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட காரணங்களை காட்டி கடந்த ஒரு மாதம் முழுவதுமாகவே குடிநீர் வழங்குவதில்லை என்றும் இதன் காரணமாக கண்டமனூர் தேனி சாலையில் அமர்ந்து காலி குடங்களுடன் பெண்கள் குழந்தைகள் மேற்பட்ட 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து போலீசார் போக்குவரத்தை மாற்றி ஆண்டிப்பட்டி வருஷநாடு சாலையில் வாகனங்கள் சென்றதால் அங்கிருந்து வந்து ஆண்டிபட்டி வருஷநாடு செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Tags

Next Story