குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து சாலைமறியல்!

குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்து வழிமறித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை பால் பண்ணை அருகே கடந்த 20 நாட்களாக அடப்பன் வயல் பகுதியில் குடிநீர் வழங்கப்படாத கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்து வழிமறித்து சாலை மறியல்... நகராட்சி அதிகாரிகள், திருக்கோகர்ணம் போலீசார் பேச்சுவார்த்தை... கோடை காலம் தொடங்கிய நிலையில் தண்ணீர் பிரச்சனை புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள 42 வார்டுகளில் தண்ணீர் பிரச்சனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அடப்பன்வயல் பகுதியில் கடந்த 18 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகிக்க வில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பால் பண்ணை அருகே புதுக்கோட்டை திருச்சி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் திருக்கோகர்ணம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story