சாலைகளை சீரமைக்க வேண்டும்: மேயருக்கு பொதுமக்கள் கோரிக்கை!!

சாலைகளை சீரமைக்க வேண்டும்: மேயருக்கு பொதுமக்கள் கோரிக்கை!!

பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டு சின்னகண்ணுபுரம், செல்வ விநாயகர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை காலத்திற்கு பின்னர் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, அப்பகுதிகளில் தார்சாலைகள், பேவர் பிளாக் சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை துவங்க மாநகராட்சி மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story