வேடலில் எரியாத சாலையோர மின் விளக்குகள்

வேடலில் எரியாத சாலையோர மின் விளக்குகள்

இருளில் மூழ்கியுள்ள சாலைகள்

வேடல் பகுதியில் ஒரு புறம் மின் விளக்குகள் எரியவில்லை என, வாகன ஓட்டிகள் இடையே புகார் எழுந்துள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையில் இருந்து, ஆறுவழிச் சாலை மற்றும், 18 இடங்கள் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த சாலை விரிவாக்க பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகள் ஆங்காங்கே நிறைவு பெற்று உள்ளன. மேம்பாலத்திற்கும், சாலைக்கும் இணைப்பு ஏற்படுத்தும் பணிகள் முடங்கியுள்ளன.

இருப்பினும், சாலை ஓரம் மின் விளக்கு பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, வெள்ளைகேட், ராஜகுளம் ஆகிய பகுதிகளில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின் கம்பங்கள் அமைத்தனர். சமீபத்தில், வெள்ளைகேட் மேம்பாலம், பொன்னேரிக்கரை, ராஜகுளம் ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்கம் நிறைவு செய்த பகுதிகளில், மின் விளக்கு பொருத்தும் பணி நடந்து வந்தது.

கடந்த பிப்., மாதம் வெள்ளைகேட் மேம்பாலம் மற்றும் ராஜகுளம் சாலை ஓரம் இருக்கும் மின் விளக்குகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இந்த மின் விளக்குகளால் சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இருள் நீக்கி ஜொலிக்கிறது.

இருப்பினும், வேடல் பகுதியில் ஒரு புறம் மின் விளக்குகள் எரியவில்லை என, வாகன ஓட்டிகள் இடையே புகார் எழுந்துள்ளது. அதை சரி செய்து, மின் விளக்கை எரியவைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது."

Tags

Next Story