திருபுவனம் அருகே சாலையோர மரங்கள் வெட்டி அகற்றம்: வாகன ஓட்டிகள் அவதி

திருபுவனம் அருகே சாலையோர மரங்கள் வெட்டி அகற்றம்: வாகன ஓட்டிகள் அவதி

வெட்டப்பட்ட மரங்கள்

திருப்புவனம் அருகே சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளகி உள்ளனர்.

திருப்புவனம் பகுதியில் தொடர்ந்து சாலையோர மரங்களை வெட்டி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மதுரையில் இருந்து நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக சாலையோரம் இருந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

சாலைப்பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டால் ஒரு மரத்திற்கு பத்து மரம் நடவு செய்து வளர்க்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டும் நான்கு வழிச்சாலையை ஒட்டி வெறும் புங்கை மரங்கள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. அதனையும் சிலர் வெட்டி வருகின்றனர். இதே போல நகர்ப் பகுதிக்குள்ளும் தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. திருப்புவனம் தாலுகா அலுவலகம் அருகே புதுப்புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.

குடியிருப்புகளுக்கு இடையூறாக மரங்கள் இருப்பதாக கருதி பலரும் மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். செல்லப்பனேந்தல் விலக்கு எதிரே சாலையோரம் இரண்டு ஆலமரங்கள் நிழல் தந்து வந்தன.

சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக அதன் வேர்ப்பகுதியில் காய்ந்த இலைகளை குவித்து வைத்து தீவைத்து மரத்தை வலுவிழக்க செய்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆலமரத்தின் பல்வேறு கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.

Tags

Next Story