ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கட்டி போட்டு நகைகள் கொள்ளை!

ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கட்டி போட்டு நகைகள் கொள்ளை!

நகை கொள்ளை 

கோவை தொண்டாமுத்தூர் அருகே தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை.
கோவை: தொண்டாமுத்தூர் அருகே உள்ள குரும்பபாளையம் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி (வயது 70) ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். வீட்டில் தனியாக வசித்து வருகிறார்(திருமணமாகாதவர்). நேற்றிரவு வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்த போது இரண்டு மர்ம நபர்கள் அவரது வீட்டின் பின்பக்க வழியாக நுழைந்து கத்தியை காட்டி விஜயலட்சுமியை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயின், 4 பவுன் வளையல், தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்ததுடன் அவரை நாற்காலியில் கட்டி போட்டுவிட்டு பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த நிலையில் மர்ம நபர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.பின்னர் விஜயலட்சுமி மீட்கப்பட்டதை தொடர்ந்து தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதும் அவரை அப்பகுதி மக்கள் பிடிக்க முயல்வதும் பதிவாகி உள்ளது. மேலும் விஜயலட்சுமியின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் இரண்டு மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் அதில் ஒட்டபட்டிருந்த ஸ்டிக்கர்களை கொண்டு அந்த மதுபானங்கள் எந்த மதுபான கடையில் வாங்கப்பட்டது என்று போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்பொழுது மர்ம நபர்கள் இருவரும் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags

Next Story