வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

கொள்ளை

உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்த இரு வீடுகளின் பூட்டை உடைத்து 13 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

உளுந்துார்பேட்டை மாடல் காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார்,32; உளுந்துார்பேட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக் கொண்டு மனைவியுடன் விக்கிரவாண்டிக்கு சென்று இருந்தார்.நேற்று அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்த கிடந்தது. அதில் வைத்திருந்த 11 சவரன் நகை, ரூ. 5 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. இதேபோல், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த தமிழ்வேந்தன், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 2 சவரன் நகையை திருடு போயிருந்தது.

தகவலறிந்த உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story