வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

காவல் நிலையம் 

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த எட்டியப்பன் -ஆதிலட்சுமி தம்பதி வீட்டில் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஏழு சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து ஆதிலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story