கோயில் பூட்டை உடைத்து கொள்ளை

கோயில் பூட்டை உடைத்து கொள்ளை
முருகன் கோயில் பூட்டு மற்றும் உண்டியல்உடைத்து நகை பணம்கொள்ளை
செங்கல்பட்டு மாவட்டம், திருவளச்சேரி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த திருவளச்சேரி கிராமத்தில் முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று இரவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உள்ளே இருந்த மூன்று சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணமும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், கோயிலுக்கு வெளியில் இருந்த உண்டியலை உடைத்து தூக்கிச் சென்று வெளியில் உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டு வயல்வெளி பகுதியில் உண்டியலை வீசிவிட்டு சென்றுள்ளனர்.இது திருட்டு சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story