அடுத்ததடுத்த மளிகை கடைகளின் கதவை உடைத்து கொள்ளை

தேவதானப்பட்டியில் அடுத்ததடுத்த மளிகை கடைகளின் கதவை உடைத்து ரூ.3.50 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அரிசி கடை பகுதியில் அடுத்தடுத்து உள்ள தாய் மளிகை கடை மற்றும் அப்பாஸ் மளிகை கடை ஆகிய இரு கடைகளில் பக்கவாட்டில் உள்ள தகரக் கதவுகளை உடைத்து தாய் மளிகை கடையில் ஒரு லட்ச ரூபாயும், அப்பாஸ் மளிகை கடையில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும் நேற்று இரவு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கடை உரிமையாளர்கள் கொடுத்த புகார் மற்றும் தகவலின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல்துறையினர் கொள்ளை நடந்த மளிகை கடைகளை ஆய்வு செய்து கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளின் மூலம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர் மேலும் தேனி, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதால் தேவைதானப்பட்டி பேரூராட்சி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story