கோவிலில் கொள்ளை - கண்காணிப்பு கேமராவில் சிக்கிய வாலிபர்

கோவிலில் கொள்ளை - கண்காணிப்பு கேமராவில் சிக்கிய வாலிபர்

சிசிடிவி கேமராவில் சிக்கிய வாலிபர் 

நாகர்கோவில் வரசித்தி விநாயகர் கோவிலில் உண்டியலை திருடியவரை சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டாறு உச்சி மாகாளியம்மன் கோவில் தெருவில் வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வெளியே உண்டியல் அமைந்திருக்கிறது. சம்பவத்தன்று இரவு மர்ம நபர் ஒருவர் கடப்பாரை கம்பியால் இந்த உண்டியலை உடைத்து பெயர்த்து எடுத்து சென்றார். அடுத்த நாள் காலை கோயில் உண்டியல் திருடப்பட்டு இருந்ததை கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கோயில் அமைந்துள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அதில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கடப்பாரையால் உண்டியலை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகளின் அடிப்படையில் அந்த வாலிபர் யார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

அந்த வாலிபர் போட்டோவை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி உள்ளனர். வெளி மாவட்ட காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பழைய குற்ற வழக்குடன் தொடர்புடைய குற்றவாளிகளின் போட்டோவுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். தனிப்படை போலீசார் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags

Next Story