வீட்டின் கதவை உடைத்து கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து கொள்ளை

கொள்ளை 

பொன்னமராவதி அருகே வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை ஊராட்சி ஆதியாவயல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(52). விவசாயி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்றார். மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், 60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

காரையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் 2 நாட்களுக்கு முன்பு மறவாமதுரை ஊராட்சி சங்கம்பட்டியில் வீட்டின் பூட்டு உடைத்து 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story