பெண்ணிடம் தங்க நகை பறிப்பு - மர்ம நபர்கள் கைவரிசை

பெண்ணிடம் தங்க நகை  பறிப்பு -  மர்ம நபர்கள் கைவரிசை

செயின் பறிப்பு 

சங்ககிரி அருகே பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் 4 சவரன் தங்க செயினை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சங்ககிரி அருகே நாகிசெட்டிபட்டி, மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மனைவி ஜெயலட்சுமி (65). இவர் அப்பகுதியில் உள்ள அவரது மருகமகள் பிரியதர்சினி வீட்டிற்கு வெளியே நின்று பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் ஜெயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பறந்து சென்றனர். இச்சம்பம் குறித்து ஜெயலட்சுமி சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சங்ககிரி போலீசார் தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story