மூதாட்டியிடம் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மூதாட்டியிடம் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மூதாட்டி மகாலட்சுமி

துறையூர் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியிடம் ஆறரை சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

திருச்சி மாவட்டம் துறையூர் உயர்நிலைப்பள்ளி சாலையில் வசித்து வருபவர் மகாலட்சுமி. இவரது கணவர் இறந்த நிலையில் மகாலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார் . இந்நிலையில் இன்று அதிகாலையில் சுமார் 5 மணி அளவில் வீட்டு வாசலுக்கு கோலம் போடுவதற்காக எழுந்து சென்ற போது , முகத்தை துனியால் மறைத்து வந்த இரண்டு மர்ம நபர்கள், மகாலட்சுமி சத்தம் போடாத வகையில் வாயை பொத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை சவரன் நகையை பறித்து சென்று உள்ளனர். இது குறித்து துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த மூதாட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரம் மற்றும் மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Tags

Next Story