வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

திருட்டு

சோளிங்கர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த கிருஷ்ணாவரம் ஏ.வி.டி. நகரில் வசிப்பவர் செல்வம் (49). இவரது மனைவி வெண்ணிலா உடல் நலக்குறைவால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் செல்வம் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு மனைவியை பார்ப்பதற்காக சென்றார்.

நள்ளிரவுக்கு பின் 2 மணி அளவில் வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்றபோது வீட்டிலிருந்த தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

இது குறித்து கொண்டபாளையம் காவல் நிலையத்தில் செல்வம் அளித்த புகாரின்பேரில் போலீசார் இன்று வழக்குப் பதித்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக பாராஞ்சியை சேர்ந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story